BREAKING NEWS

திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 5 -ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநில சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு (SR) நாளது தேதி வரை பதிவு பராமரிக்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர் அனைவருக்கும் (ATM) மூலம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நிதிப் பயன்களும் (ATM) மூலம் வழங்கப்பட வேண்டும். (ஆர்.கே. பேட்டை) பெத்தராமாபுரம். எரும்பி, வீராளத்தூர், வங்கனூர் (PACCS) மேற்கண்ட சங்கங்களில் பணிபுரியும் விற்பளையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திருமிகு பதிவாளர் சுற்றறிக்கையின்படி 10 ஆண்டு முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டு முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும் ன, திருவள்ளூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலையில் பணிபுரியும் தகுதியுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு முறையே திருமிகு பதிவாளர் சுற்றறிக்கையின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் எடையாளரிலிருந்து விற்பனையாளர் பதவி உயர்வும், விற்பனையாளரிலிருந்து எழுத்தர் பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் வழங்க வேண்டும். மேலும் அனைத்து நகர்வு வாகனத்தில் திருமிகு பதிவாளர் சுற்றறிக்கையின்படி எடை தராசு அனுப்பப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளுக்கு திருமிகு பதிவாளர் சுற்றறிக்கையின்படி கட்டுப்பாடற்ற பொருள்களை வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்களின் பணிக்கொடை ஆண்டுக்கொருமுறை (கிராஜவிட்டி) LIC அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். திருமிகு பதிவாளர் சுற்றறிக்கையின்படி அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். மேலும் பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சரிசெய்து வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை அலுவலகத்தில் இறக்குவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். அதில் காலி சாக்குகளை கட்டுவதற்கு கட்டுக் கூலியும், அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு லாரி வாடகையும் வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200 கற்கும் மேற்பட்ட நியாயவிலை பணியாளர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 5 -ந் தேதி தமிழக முழுவதும் நியாயவிலை பணியாளர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேட்டி – பாலசுப்பிரமணியன் – மாநில சிறப்பு தலைவர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம்.

CATEGORIES
TAGS