தில்லையாடியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
தில்லையாடியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி ஊராட்சியில் உள்ள தியாகிய வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் சுமார் 2 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார் மேலும் அதே பள்ளியில் நடைபெற்ற பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 30 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார் பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பேனா வழங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் திமுக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.