தேனி மாவட்டம் போக்குவரத்து நெரிசலில் திண்டாடும் வாகனங்கள்.

தேனி மாவட்டம் போக்குவரத்து நெரிசலில் திண்டாடும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை -தேனி ரயில் சேவை தொடங்கப்பட்டது மேலும் தேனியின் நுழைவு வாயிலாக கருதப்படும் புதிய பேருந்து நிலையம் மதுரை சாலை சந்திக்கும் இடத்தில் ரயில்வே பாலம் எதுவும் இல்லாததால் ரயில் வரும் நேரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்படுவது வழக்கம்.

மேலும் இந்த இடம் தேனியின் நுழைவு வாயிலாக இருப்பதால் கம்பம் குமுளி சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் வாகனங்கள் அனைத்தும் சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது .

மேலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நேரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சரியான முறையில் கடை பிடிக்காததால் மேலும் அதிக அளவு போக்குவரத்து நெரு ச்சல் ஏற்பட்டு வருகிறது இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
