BREAKING NEWS

தேவாமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

தேவாமங்கலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில்ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏராளமானபக்தர்கள்தீ மிதித்து நேர்த்திக் கடன் தீ கடனை நிறைவேற்றினர்.பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கோலாகலமாக இன்று தொடங்கியது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அக்னி மற்றும் பூங்கரகத்துடன் வலம் வந்து, ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

CATEGORIES
TAGS