BREAKING NEWS

தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறை இருந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்று வருகிறது.

 

கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நடைபெறாத இருந்தது.

 

தேர்தல் முடிவுகளுக்கு பின் ஒரு வாரம் மட்டும் திங்கட்கிழமையை மனு அளிக்க மக்கள் வந்தனர்.

 

அதைத் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் பொதுமக்கள் மனு அளிக்க இயலாத நிலை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று வழக்கம் போல் பத்து மணிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் துவங்கியது.

 

பத்து மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் தங்கள் மனுக்களை பதிவு செய்ய காத்திருந்த நிலையில் கூட்டம் துவங்கியதும் பதிவுகள் நடைபெற்று ஒவ்வொருவராக சென்று தங்கள் மனுக்களை அளித்தனர்.

 

அதிக அளவில் மக்கள் கூடியதால் மனு பதிவு செய்யும் இடங்களிலும், மனுக்களை பெரிய இடங்களிலும் அதிகாரிகள் சற்று சிரமப்பட்டனர்.

 

மாற்றுத்திறனாளிகளும் அதிக அளவில் இருந்து தங்கள் தேவைகள் குறித்து மனுக்களை நேரடியாக ஆட்சியரிடம் இடம் அளித்து கோரிக்கையாக வைத்தனர்.

CATEGORIES
TAGS