நடிகர் ஆதி- நிக்கி கல்ராணி திருமணம் நள்ளிரவில் நடந்தது.
நடிகர் ஆதி- நிக்கி கல்ராணி திருமணம் நள்ளிரவில் நடந்தது.
நடிகர் ஆதி- நிக்கி கல்ராணி திருமணம் நள்ளிரவில் நடந்தது. ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
’மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகத நாணயம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. சமீபத்தில் ’கிளாப்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து லிங்குசாமி இயக்கும் ’வாரியர்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது.
இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். சென்னையில் எளிமையாக நடந்த இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டன. இவர்கள் திருமணம் மே 18-ம் தேதி (நேற்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது.
இரவு ஒரு மணியளவில் நடிகர் ஆதி- நிக்கி கல்ராணிக்குத் தாலி கட்டினார். இதில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் .
நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன், இசை அமைப்பாளர் இளையராஜா, தேவிஸ்ரீ பிரசாத், விஜயகுமார், ஜீவா, அருண்விஜய், நானி, சந்திப் கிஷன், சசிகுமார், பாக்யராஜ், பூர்ணிமா உட்பட பல திரையுலகினர் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
