நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மருதாளம் கூட்டு சாலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள் தன்னை வெற்றி பெறச் செய்ய சுட்டெரிக்கும் வெயில் கூட பொருட்படுத்தாமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த அனைத்து கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் ஒன்றிய நகர பேரூர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் வரை ஒவ்வொருவருக்கும் தனது நன்றியை தெரிவிக்கிறேன் என தெரிவித்தார் . மேலும் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றவுடன் நமது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு பணி பாடுபடுவேன். தேர்தலில் கொடுத்த வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் , சுகாதார சீர்கெட்டை ஏற்படுத்தி வரும் இரண்டு லட்சம் டன் குரோமியக் கழிவுகளை அகற்றுதல், நீர்நிலை மேம்படுத்தும் விதமாக பாலாறு பொன்னையாறு பகுதிகளில் தடுப்பணைக்கட்டு நடவடிக்கை எடுப்பேன் , மருத்துவக் கல்லூரி வேளாண் கல்லூரி சட்டக் கல்லூரி அமைக்க தீவிர முயற்சி எடுப்பேன் என அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உழைப்பேன் என தெரிவித்தார்.