BREAKING NEWS

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில்  முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிய திமுக.

வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி, சாதனை விளக்கி வாக்கு சேகரிப்பு…நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு, நடைபெற உள்ள நிலையில் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தையும், வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்சிகளின் பிரச்சாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திமுக அரசின் கடந்த இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, திண்னைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை, டிவிஎஸ் அருகே 35வது வார்டு பகுதியில் நகர திமுக செயலாளர் செந்தில் தலைமையில் திமுகவினர், திமுக அரசின் இரண்டரை ஆண்டு விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS