BREAKING NEWS

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …

நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …

தேசிய உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன் வலியுறுத்தல்…

நீலகிரி மாவட்டம் உதகையில் தேசிய உரிமைகள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சுரேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர், நீலகிரி மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் திட்டம் வரவேற்கப்படுதாகவும், சாமானிய மக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதால் அடுத்த ஆண்டு முதல் இ-பாஸ் திட்டத்தினை எளிமையாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலா நகரமான உதவியில் உள்ள சுற்றுலா தலங்களில் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை இருந்து வருவதாகவும் தமிழக அரசின் சுற்றுலா துறை அமைச்சராக உள்ளூர் அமைச்சர் இருந்து வரும் நிலையில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் இல்லாதது வேதனையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் நீலகிரி மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் எனவே தமிழக அரசு உடனடியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

CATEGORIES
TAGS