BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம்…

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகரம், கூடலூர் ஒன்றியம், தேவர்சோலை- ஓவேலி-நடுவட்டம் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம், கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில்
மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில், கழக தேர்தல் பணி செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கூடலூர் தொகுதி பார்வையாளர் பல்லவி ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

திமுக பதவியேற்ற
போது முதமைச்சர் ஸ்டாலின் கடன் கமையில் மகிழ்ச்சியின்றி காணப்பட்டார். அதற்கு முன்பிருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டுச் சென்றது.

இதையும் தாண்டி மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சுமைகளை எதிர்கொள்ள வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று 8 லட்சம் கோடி முதலீடை கொண்டு வந்தார்.

முதமைச்சரின் இந்த ராஜதந்திரங்களைப் பார்த்து பாஜக அரசு பயப்படுகிறது.

ஜனநாயகத்தை மதிக்கும் பிரதமர் அல்ல மோடி. பாஜக ஆட்சியில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வண்முறை வெடித்தது. எந்த கேள்விக்கும் பதில் சொல்லாதவர் மோடி. மோடி பிரதமரானதும். அதானி உலகின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தார். அது எப்படி என்று உலகிற்கே தெரியும்.

ப ஜக அரசு தேர்தல் பத்திரம் மூலம் 6000 கோடி பெற்றுள்ளது.

எனவே எதிர்வரும் தேர்தல் இந்தியாவையும் இந்திய அரசியல் சட்டத்தையும் பாதுகாக்கும் தேர்தலாகும். ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஆ. ராஜா பேசினார்.

CATEGORIES
TAGS