BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன ஆர்பாட்டம்.

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழ் செய்தியை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் திமுக சார்பில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் தினமலர் நாளிதழை எரித்து திமுகவினர் கண்டன கோஷம்யிட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தும், கண்டனங்களை தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து பல பகுதிகளில் திமுக மட்டுமல்லாமல் அதனுடைய கூட்டணி கட்சிகளும் தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், உதயநிதி ஸ்டாலின் நண்பனி மன்ற மாவட்ட பொருளாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட துணை அமைப்பாளர் மணிகண்டராஜ், கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், கோத்தகிரி ஒன்றிய துணை செயலாளர் மு.க.கணபதி,இளந்தென்றல் பாபு மற்றும் திமுக,உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS