BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோத்தகிரி நகரப் பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன

இந்த நிலையில் கோத்தகிரி நகர் ராம்சன்ட் அருகே உள்ள குப்டி கம்பை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை நாய் கவ்வி சென்றது இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது

கடந்த வாரம் இதே போல் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாயை வேட்டையாட முயன்று தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து கோத்தகிரி நகர் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

CATEGORIES
TAGS