BREAKING NEWS

நீலகிரி மாவட்டம் பொறியாளர்கள் சங்கம் கூடலூரில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் பொறியாளர்கள் சங்கம் கூடலூரில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கட்டிட திட்ட அனுமதி தாமதம் மற்றும் நிலுவையில் உள்ள 4600 ஒப்புதல் கோப்புகள் தொடர்பான பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் கட்டிடத் திட்ட விண்ணப்பத்திற்கான ஒற்றைச் சாளர போர்டல் சமர்ப்பித்து 5 மாதங்களுக்குப் பிறகும் ஒரு கட்டிடத் திட்டத்திற்குக் கூட மாநில அரசால் தொடங்கப்பட்ட ஒற்றைச் சாளர போர்டல் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் கட்டிட திட்ட ஒப்புதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டு, அதற்கான மனுவை நாடாளுமன்ற உறுப்பினர்,சுற்றுலாத்துறை அமைச்சர் , டிடிசிபி அமைச்சர் மற்றும்

மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நிலுவையில் உள்ள அனைத்து ஒப்புதல் கோப்புகளையும் உடனடியாக சரிசெய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாவட்ட ஆட்சியரால் இதுநாள் வரை எந்த விதமான முடிவுகளோ நடவடிக்கைகளோ எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான தெளிவான வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற நீலகிரி சிவில் இன்ஜினியர்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும்.

மேலும், நெடுங்காலமாக நிலுவையில் உள்ள கட்டிட திட்ட அனுமதி கோப்புகள் மற்றும் மாநிலத்தின் கடுமையாக உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையை மாவட்ட நிர்வாகத்திற்கு நினைவூட்டும் வகையில் கூட்டமைப்பு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS