BREAKING NEWS

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைபெறும் நோக்கில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைபெறும் நோக்கில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிபேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் The GeeKay Word
School இணைந்து,

 

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைபெறும் நோக்கில்
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை 18.03.2023 சனிக்கிழமை
அன்று காலை 08.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாலாஜா அரசு அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட உள்ளது.

 

இம்முகாமில் TATA Electronics, TVS Groups, Hyundai Steels, Saint-Gobain, Apollo
Hospitals & Pharmacy, MM Forgings, Nippon Steels, Thirumalai Chemicals, Indo Cool, Indra Industries. Carborundum Universal Limited மற்றும் Overseas Man Power Corporation Ltd., (தமிழ்நாடு அரசு நிறுவனம்) போன்ற 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணிநியமனம் செய்ய உள்ளனர்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம்வகுப்புதேர்ச்சிமுதல் SSLC, HSC, ITI, Diploma, Any
Degree, Nursing. B.E, MBA உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை நாடுநர்கள்
கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு
செய்து பயன் பெறலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ள வேலை நாடுநர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,
தற்குறிப்பு (Resume) மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து
கொண்டு. வேலை வாய்ப்பினை பெறலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்
ச.வளர்மதி, தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS