BREAKING NEWS

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா

பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பத்தாம்வகுப்பில் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த லோகேஸ்வரி மற்றும் நான்காம் இடம் பிடித்த பூஜா(490), தமிழ்மொழி(490) ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி,கேடயம், புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதேபோல்
பண்ணிரெண்டாம் வகுப்பில் அதே பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த பார்வதி(564),நித்யா(563),சந்தியா(556)
மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்…

Share this…

CATEGORIES
TAGS