பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற திரைப்படத்தின் பட பூஜையும் பாடல் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

பழனியில் குழலூதும் கண்ணனுக்கு என்ற புதிய திரைப்படத்தின் படப்பூஜை மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. எமரால்டு கிரீன் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் அபு மாலிக் தயாரிப்பில், முரளி பாண்டியனின் பாடல்,இசை, திரைக்கதை,இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக தேரடி ரிஷி, கதாநாயகியாக கார்த்திகை லட்சுமி ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான படப்பூஜை பழனியில் நடைபெற்றது.
பழனியில் உள்ள மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றி படபூஜையும், தொடர்ந்து பாடல் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து திரைப்படத்தின் முதல் காட்சியும் படமாக்கப்படட்து.
படப்பிடிப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் முரளிபாண்டியன் கூறியதாவது:- குழலூதும் கண்ணனுக்கு திரைப்பட இப்படத்தின் கதை ஒரு வீட்டிற்கு உள்ளேயே நடக்கும் கதை என்றும், பழனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என்றும், வீட்டை விட்டு வெளியே போகாத கதை இது என்றும், இசையை மையமாக வைத்து கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதையாக எழுதப்பட்டு உள்ளதாகவும் இயக்குனர் முரளி பாண்டியன் தெரிவித்தார்.