பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பரிதா ஷேக் முகமதுவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நகராட்சி முதியோர் தங்கும் இல்லத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
முன்னதாக இந்நிகழ்வில் மக்கள் உரிமைகள் கழகத்தின் பொறுப்பாளர்கள் வின்னர்மணி ,நைனா ,ஷேக் முகமது ,ரசூல் ,திருமலை, ஷேக் , கிருஷ்ணகுமார், ரவிச்சந்திரன், கார்த்திகேயன் மற்றும் மகளிர் அணி பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்ததில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
CATEGORIES திண்டுக்கல்