பழமையான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் மிகவும் பழைமையான மாரியம்மன் கோயில் தேர் திருவிழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. தேர்த்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் தேங்காய், மாவிலக்கு, பூ பழம் வைத்து அம்மனை வணங்கினர்.
தொடர்ந்து தேர்திருவிழாவான இன்று காலை அம்மன் அபிஷேகம் செய்து பல்வேறு மலர்களால் அலகரித்து திருத்தேருக்கு எழுந்தருளி, மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் பக்தர்கள் வெகு விமர்சியாக தேரை வடம் பிடித்து இழுத்தனர், சிறுதேரில் விநாயர் முன்னே செல்ல பின் அம்மன் பெரிய தேரில் காட்சியளித்த அம்மனை மக்கள் வழிபட்டனர். ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் படை சூழ அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.
பின்னர் தேர் இன்று மாலை கோவிலை வந்தடையும். இக்கோயிலை சுற்றியுள்ள செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தேர் திருவிழாவில் பங்கேற்றனர். மேலும் இரும்புலிக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் D. வேல்முருகன்.