BREAKING NEWS

பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்.

பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்.

பாபநாசத்தில் திமுக, அமமுக சார்பில் களை கட்டிய தண்ணீர் பந்தல் திறப்புவிழா உற்சாகத்துடன் வாரி வழங்கிய நிர்வாகிகள்பாபநாசம் தெற்கு வீதி மெயின்ரோட்டில் கோடைகால தண்ணீர் பந்தலை திமுக மற்றும் அமமுக சார்பில் இன்று காலை அருகருகே திறக்கப்பட்டது. அமமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் ரெங்கசாமி திறந்து வைத்தார் .

அடுத்து அரைமணி நேரத்திற்குள் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன் திறந்து வைத்தார். இதில் ஆளுங்கட்சி திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த தண்ணீர் பந்தலை காட்டிலும் அமமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த தண்ணீர் பந்தலில் நீர்மோர், கூல் ரிங்ஸ் பாட்டில் வகைகள். இளநீர், தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி பிஞ்சு, பலாபலம். தண்ணீர் பாட்டில்கள் என பல்வேறு ஐட்டங்களை அதிகளவில் பொதுமக்களுக்கு நீண்ட நேரம் வாரி வழங்கி அசத்தினார்கள். திமுக, அமமுகவினர் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் பந்தலை ஒரே நேரத்தில் திறந்ததுடன் நீர்மோர், குளிர்பானங்களை போட்டி போட்டு பொதுமக்களுக்கு வாரி வழங்கியது பலரும் வியக்கும் வண்ணம் இருந்தது.

CATEGORIES
TAGS