BREAKING NEWS

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன்கோயில் திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கஞ்சிமேடு காளியம்மன்கோயில் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு காலை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், செடில் காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் முக்கிய வீதிகளை சுற்றி கோயில் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டு பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மை, கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS