BREAKING NEWS

பிரச்சார மேடைகளில் பாஜகவை ஒரு மணி நேரம் குறை சொல்லும் முதல்வர் மு க ஸ்டாலின்.

பிரச்சார மேடைகளில் பாஜகவை ஒரு மணி நேரம் குறை சொல்லும் முதல்வர் மு க ஸ்டாலின்.

கச்சத்தீவு விவகாரத்தையும் அதனுடன் சேர்த்து விமர்சித்து வருகிறார்.மோடியின் வளர்ச்சி திட்டங்களால் மக்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் திராவிட கட்சியின் பொய் வாக்குறுதிகளை மக்கள் அறிந்து வைத்துள்ளதால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது போரூரில் பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேட்டி

 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருபெரும்புதூர் தொகுதிக்கான பாஜகவின் தேர்தல் பணிமனை சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் திறக்கப்பட்டது.

இந்த பணிமனையை பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காயத்ரி தேவி ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார். அவருடன் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, மாவட்ட தலைவர் மனோகரன், பாஜக நிர்வாகிகள் மற்றும் பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கேரள செண்டை மேளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காயத்ரி தேவி கூறுகையில்

கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை சிறப்பாக இருப்பதாக கூறினார்.

மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் மக்கள் நன்மை அடைந்துள்ளதாகவும், திராவிட கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை மக்கள் அறிந்து வைத்துள்ளதாலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், பிரச்சார மேடைகளில் எல்லாம் பாஜகவை ஒரு மணிநேரம் குறை சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தையும் அதனுடன் சேர்த்து கூறுவாதாக விமர்சித்தார்..

CATEGORIES
TAGS