BREAKING NEWS

பிரபல பின்னணிப் பாடகர் மேடையில் சரிந்து விழுந்து மரணம்!

பிரபல பின்னணிப் பாடகர் மேடையில் சரிந்து விழுந்து மரணம்!

பிரபல பின்னணி பாடகர், பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாளப் பின்னணிப் பாடகர் எடவா பஷீர் (78). மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஆழப்புழையில் உள்ள பத்திரப்பள்ளியில் நேற்றிரவு நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்துக்கான இசை நிகழ்ச்சி அது. கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன்றை எடவா பஷீர் மேடையில் ரசித்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் ஆழப்புழையில் இருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மறைந்த பஷீர், கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியவர். அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )