பி ஏ பி இரண்டாம் மண்டலத்தில் 3 ம்சுற்றுக்கு தண்ணீர் திறப்பு.

பிஏபி இரண்டாம் மண்டலத்தில் 3 ம் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி வருகிறது 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாம் மண்டல பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது உரிய இடைவெளி விட்டு மொத்தம் 4 சுற்றுகள் ஆக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த வாரம் இரண்டாவது சுற்று நிறைவடைந்தது இதைத் தொடர்ந்து 3 ம் சுற்று தண்ணீர் உடுமலை கால்வாயில் திறக்கப்பட்டது. இரண்டாம் மண்டலத்தில் மொத்தம் 94 ஆயிரத்து 201ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
டிசம்பர் 24ஆம் தேதி வரை மொத்தம் 120 நாட்களுக்கு 7600 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
CATEGORIES திருப்பூர்