BREAKING NEWS

புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு  வலைவீச்சு.

புளியங்குடியில் மெடிக்கல் ஸ்டோர் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்மநபர்க்கு  வலைவீச்சு.

தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசி மாவட்டம். கடைய நல்லூர் தாலுகா புளியங்குடி – டி என் புதுக்குடி காமராஜர் சிலை அருகேயுள்ள மெடிக்கல் ஸ்டோரில் அதிகாலை பூட்டை உடைத்து 33 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

இரவு பத்து மணி அளவில் கடை உரிமையாளர் மாரியப்பன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர் இந்நிலையில் காலை 9 மணிக்கு கடை சட்டர்  திறக்கப்பட்டு இருப்பதை கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

 

 

உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் 33 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது உடனடியாக இது குறித்து புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்து  விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ் ஐ செல்வ மாணிக்கம் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். தென்காசி கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

காவல்துறையினர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையடித்த மர்ம நபர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடை அருகே உள்ள கோவிலிலும் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

 

பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை செல்லும் புளியங்குடி மத்திய பகுதியில் கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS