BREAKING NEWS

பெண்ணாடம் அருகே பழுதான மின் கம்பத்தை சரிசெய்வதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் அலட்சியம். பொதுமக்கள் அவதி

பெண்ணாடம் அருகே பழுதான மின் கம்பத்தை சரிசெய்வதில் ஊராட்சி நிர்வாகம்  மற்றும் மின்சார வாரியம் அலட்சியம். பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்தது. இந்நிலையில் கோனூர் கிழக்கு பகுதியில் மின் கம்பம் முறிந்ததால் குடிநீர் வழங்கக்கூடிய ஆழ்துளை கிணற்றுக்கு மின்சாரம் இல்லாமல் கிராம மக்களுக்கு ஒரு வாரமாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கக்கூடிய குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள மோட்டார் களில் குடிநீர் எடுக்க அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

CATEGORIES
TAGS