போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்!
போலீஸ் மோப்ப நாய் லூசி உயிரிழப்பு: மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காவல்துறையினர்!
வேலூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் மோப்ப நாய் லூசி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணி செய்து வந்தது. இதில் 2022-ல் ஓய்வு பெற்ற மோப்ப நாய் லூசி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக 27 ஆம் தேதி உயிரிழந்தது. வேலூரில் உள்ள துப்பறியும் நாய் படை பிரிவு மையத்தில் மோப்ப நாய் லூசியின் உடலுக்கு காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றதும், வவிஐபி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனைகளில் சிறப்பாக செயல்பட்டதும் லூசியின் செயல்பாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்திய காவலர்கள் மிகவும் சோகத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.