மகாதானபுரம் ஓசை மணி காளியம்மன் ஆலய சித்திரை பெருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது முதல் நாளான நேற்று சுந்தர விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இன்று ஓசைமணி காளியம்மனுக்கு காவிரி கரையில் இருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்களோடு சக்தி கரகம் புறப்பட்டது முன்னதாக பச்சை காளி ஆட்டத்துடன் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தது பின்னர் ஓசைமணி காளியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS மயிலாடுதுறை