மதுரையில் பயணியை இறக்கி இறக்கி விட்டதால் நிலக்கோட்டையில் பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சேர்ந்த சிலர் நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் சில தனியார் பஸ்களில் நிலக்கோட்டைக்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறினார்கள்.
அப்போது தனியார் பஸ் கண்டக்டர் பஸ்சில் ஏறிய நிலக்கோட்டை பயணிகளை மட்டும் பஸ்ஸிலிருந்து மதுரையிலேயே கீழே இறக்கி விட்டனர். இதற்கு பயணிகள் நிலக்கோட்டை தேனியில் மட்டும் இப்படி இறக்கிவிட்டு செல்கிறீர்கள் என்று கண்டக்டரிடம் நியாயம் கேட்டதாக கூறப்படுகிறது.
]அந்த பயணிகள் உடனடியாக நிலக்கோட்டையில் இருக்க உறவினர்களுக்கு போனில் தகவல் அளித்தனர். இதை அறிந்த உறவினர்கள் நிலக்கோட்டை நால் ரோட்டில் அந்த 2 தனியார் பஸ்களிலும் சிறைப்பிடித்தனர் . பின்னர் தனியார் பஸ் நடத்துனர் டிரைவர் விளக்கும் பொதுமக்களுக்கும் நிலக்கோட்டை நடுரோட்டில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசி இனிவரும் காலங்களில் நிலக்கோட்டை பயணிகளையும் பஸ்சில் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள் விடுவித்தனர். நிலக்கோட்டை நால்ரோட்டில் பஸ்சை சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படவிளக்கம்:- நிலக்கோட்டையில் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம.