BREAKING NEWS

மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் .

மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் .

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை நாராயணபுரம் அவ்வையாம்பாள்புரம் பல்லவராயன் பேட்டை குத்தாலம் தேரிழந்தூர் சீர்காழி அகனி மாயூரநதர் நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பயனாளர்களுக்கு மின் இணைப்பு தராமல் மின்சார வாரியத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சங்கங்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மின் இணைப்பு தருவதற்கு மின்வாரியம் மறுத்துவிட்டது இதனை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன தேர்தலுக்கு முன்பு மின் இணைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்பும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

CATEGORIES
TAGS