BREAKING NEWS

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம் எல் ஏ தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர்,வைத்தியநாதன் பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ஞான.இமயநாதன் வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர்.

அப்போது பேசிய ஆர் எஸ் பாரதி தமிழக முதலமைச்சர் மகளிர்க்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கியதற்கு வாக்காளர்கள் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்ததாக குறிப்பிட்டார். அப்போது மயிலாடுதுறை எம்பி சுதா,திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ் ராஜகுமார்,திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட திமுக இந்தியா கூட்டணி அனைத்து கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் எம்பி ராமலிங்கம் நன்றி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS