BREAKING NEWS

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு மௌன அஞ்சலி அமைதி ஊர்வலம் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் நடைபெற்ற மௌன அஞ்சலி ஊர்வலத்துக்கு முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான மனோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சோளிங்கர் செல்லும் சாலையில் இருந்து தொடங்கப்பட்டு முக்கிய சாலையின் வழியாக தேமுதிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கொளுத்தி வரும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊர்வலத்தில் கலந்து கொண்டு விஜயகாந்தின் புகழை போற்றும் வகையில் அமைதி மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்தி பேருந்து நிலையத்தில் பல்வேறு பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு படத்திற்கு தீபாரதனை காண்பித்து பொதுமக்களுக்கு மாபெரும் அறுசுவை அன்னதானத்தை வழங்கினார்கள்.

CATEGORIES
TAGS