BREAKING NEWS

மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.

மாண்டஸ் புயல் எதிரொலி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது பொது மக்கள் அச்சம்.

மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல்சீற்றம் அதிகரித்து கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

 

மாண்டஸ் புயல் வங்க கடலில் உருவாகி நிலை கொண்டிருப்பதை தொடர்ந்து கடல் சீற்றமடைந்து கடல் நீர் மீனவ கிராமமான சந்திரபாடி புகுந்தது. கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அங்கு அமைக்கபட்டிருக்கு முகாம்களுக்கு செல்லவும் அரசு சார்பில் அறிவுறுத்த பட்டுள்ளது.

 

 

பாதிக்க பட்ட மீனவ கிராம பொது மக்களுக்கு நிவாரணப் பணி மேற்கொள்ள திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர். பாஸ்கர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் பார்வையிட்டு மக்கள் குறையை கேட்டு அறிந்தனர்.

 

 

பாதிக்க பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு உள்பட்ட நிவாரண பொருட்கள் சிரமமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )