மாவட்ட செய்திகள்
திருவெறும்பூர் அருகே மாமியாரை அடித்து மிரட்டி,நகையையும் பறித்துக்கொண்டு ஒரு வருடமாக தலைமறைவான பெல் நிறுவன ஊழியரை ஐஜி உத்தரவால் போலீசார் கைது.

திருவெறும்பூர் அருகே உள்ள பாப்பா குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் வசிப்பவர் கலைச்செல்வி (53) இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்தபோது இறந்துவிட்டார்.
மகள் சலோமி என்பவரை நடராஜபுரம் ஊராட்சியில் வசிக்கும் அருளானந்தம் மகன் சகாய சுரேஷ்(40) பெல் நிறுவன ஊழியர் இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார்.
பின்னர் அதிக வரதட்சணை கேட்டு கணவர் சகாய சுரேஷ் தொந்தரவு செய்ததால் 2019 ஆம் ஆண்டு சலோமி கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மகளுக்கு சீர்வரிசையாக போட்ட நகைகள், நிலம் பணம் ஆகியவற்றை தொடர்ந்து கலைச்செல்வி கேட்டு வந்தார் ஆனால் மருமகன் சகாய சுரேஷ் தனது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு கலைச்செல்வியை அடித்து மிரட்டி வந்தனர் இதுகுறித்து கடந்த வருடம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்து மேற்படி சகாய சுரேசை போலீஸார் ஒரு வருடமாக தேடி வந்தனர் தொடர்ந்து போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கவே கலைச்செல்வி இதுகுறித்து திருச்சி மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் செய்தார் ஐஜியின் அதிரடி உத்தரவின்படி சகாய சுரேஷ் திருவெறும்பூர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
