மாவட்ட செய்திகள்
வேலூர், காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார்.

காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்தார். உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார்.
வேலூர் மாவட்டம் ,காட்பாடி அடுத்த திருவலம் அருகில் உள்ள குகையநல்லூர் காலனியைச் சேர்ந்தவர் சரத் ( 26). இவர் நெல் அறுவை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.
சரத் கடந்த 11-ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சரத்தை தொழில் செய்ய விடாமல் போலீசார் அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார்கள். அதனால் தான் விரக்தி அடைந்து அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து மேல்பாடி காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி திருவண்ணாமலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி., ஆனிவிஜயா உத்தரவிட்டுள்ளார்.
சரத் குடும்பத்தினர் மீது காதல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உதவி ஆய்வாளர் கார்த்தி சரியான முறையில் விசாரிக்கவில்லை. அதன் காரணமாகவே சரத் போலீஸ் நிலையம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். எனவே உதவி ஆய்வாளர் கார்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
