மாவட்ட செய்திகள்
அந்தியூர் அருகே யானை துரத்தியதில் கீழே விழுந்து ஒருவர் படுகாயம்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் சரகம் முரளி பிரிவு தாளக்கரை என்னும் பகுதியில் நடைபெற்று வரும் திருவிழாவில் கலந்து கொள்ள தாளக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் நடந்து சென்ற போது வனப்பகுதியில் இருந்து வந்த யானை முருகனை விரட்டியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இதுகுறித்து அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்திரசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
