மாவட்ட செய்திகள்
அந்தியூரில் தொலைந்து போனஐபோன் 6 உரியவரிடம் ஒப்படைப்பு.

அந்தியூர் மஜித் வீதியைச் சேர்ந்தவர் சல்மான் இவர் நேற்று தனது செல்போன் தொலைந்து விட்டதாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் இந்நிலையில் இன்று அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ரிபாத் செல்போன்கடைக்கு ஒரு நபர் ஐபோன் 6 சர்வீஸ் செய்ய கொண்டு வந்தார் அவரிடம் விசாரித்தபோது அது கிழே கிடந்து எடுத்ததாக தெரிவித்தார் உடனடியாக ரிபாத் செல்போன் கடை உரிமையாளர் அந்தியூர் எஸ்ஐ கார்த்தியிடம் செல்போனை ஒப்படைத்தார் விசாரணையில் சல்மானின் செல்போன் தெரியவந்ததால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது ரிபாத் செல்போன் கடை உரிமையாளருக்கு எஸ் ஐ கார்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இது பற்றி எஸ் ஐ கார்த்தி தெரிவிக்கும் பொழுது யாராவது செல்போன் கடை சர்வீஸ் செய்ய கொண்டு வந்தாலும் அல்லது பிளாஷ் செய்ய கொண்டு வந்தாலும் அவர்களிடம் செல்போனின் பில் கேட்டுப் பெறவும் என தெரிவித்தார்.
அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
