மாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் ஒரு மணி நேரத்தில் 150 பேர் மீது ஹெல்மெட் அணியாமல் சென்றதாக வழக்குப்பதிவு.

நாகர்கோவிலில் ஒரு மணி நேரத்தில் வாகன சோதனை மேற்கொண்ட போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் கோட்டார் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற 150 பேர்களை ஒரு மணி நேரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர் இதுபோன்ற சோதனைகள் மாவட்டம் முழுவதிலும் நடைபெறும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
