BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

காட்பாடியில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து பிரிவு உதவி காவல் ஆய்வாளர்!

காட்பாடியில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து பிரிவு உதவி காவல் ஆய்வாளர்! வேலூர்,ஏப்.23: வேலூர் மாவட்டம், காட்பாடியில் இயங்கி வரும் போக்குவரத்து பிரிவு காவல் துறையில் மனிதருள் மாணிக்கமாக திகழ்கிறார் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன். வெங்கடேசன் என்ற பெயர் திருமலையில் உள்ள திருவேங்கடவனின் மற்றுமொரு பெயர் தான் என்று சொல்வதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் .

அந்த பெயருக்கு ஏற்றவாறு பொது மக்களுக்கு சேவை செய்வதில் வெங்கடேசனுக்கு நிகர் வெங்கடேசன் என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடு உள்ளது. இது சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. பலருக்குத் தெரியாத உண்மை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். யாராவது ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்காமல் குறிப்பாக பத்தோடு இதுவும் ஒன்று என்று வித்தியாசம் தெரியாமல் இருந்து விட்டுச் செல்லலாம்.

ஆனால் அப்படியெல்லாம் பணியாற்றாமல் தன்னால் இயன்ற உதவிகளை போக்குவரத்து பிரிவில் தனது வீட்டு வேலையை காட்டிலும் நாட்டு வேலை பெரிது என்று பொதுநலத்துடன் பணியாற்றி வருகிறார் உதவி காவல் ஆய்வாளர் கடமைவீரன் வெங்கடேசன். இதுநாள் வரை காட்பாடியில் போக்குவரத்து பிரிவில் கொண்டு வரப்படாத பல புதுமைகளை கொண்டு வந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளார் வெங்கடேசன் என்று சொன்னால் அது மிகையாகாது. வெங்கடேசனின் பொதுநல சேவைகளை சொல்லிக்கொண்டே செல்லலாம்.

எட்டு மணி நேரம் தானே பணி என்று பாராமல் சுயநலம் பார்க்காமல் பொது நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறார் இந்த உதவி ஆய்வாளர் வெங்கடேசன் இது பல அதிகாரிகளுக்கு சரிவரத் தெரியவில்லை ஏன் குறிப்பாக காவல்துறையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காட்பாடியில் என்ன நடக்கிறது போக்குவரத்து பிரிவைப் பொறுத்தவரை உயிரைக் கொடுத்து வேலை செய்யும் நிலையை கொண்டுவரச் செய்தவர் இந்த கடமை வீரன் வெங்கடேசன் என்று அடித்துக் கூறலாம் காட்பாடி பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் நிழற்குடை அமைத்து அதில் காவலர்களுக்கு போக்குவரத்து சமிக்கைகள் அடங்கிய காவல்துறை அறைகளை நிறுவி அவர்களை நிழலில் பணியாற்ற செய்துள்ளார் குறிப்பாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் போது அவர்களுக்கு எவ்வித களைப்பும் சலிப்பும் ஏற்படாத வகையில் ஒலிபெருக்கி வைத்து சில பல அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார்.

இந்த உதவி ஆய்வாளர் வெங்கடேசன் இதைத்தான் குறிப்பாக பதிவு செய்ய செய்தியாளர்கள் விரும்புகின்றனர் காவல்துறையினர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் பத்திரிகையாளர்கள் அவர்கள் செய்யும் நல்லதையும் சுட்டிக்காட்ட தவறக்கூடாது ஏனெனில் அவர்கள் செய்யும் கெட்டதை மட்டும் காட்டிவிட்டு நல்லதை சுட்டக்காட்ட தவறுவது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை போலாகிவிடும்.

நல்லது செய்யும்போது பாராட்டியாக வேண்டும் போக்குவரத்து சிக்னல்கள் போக்குவரத்து விதிகள் தெள்ளத்தெளிவாக ஒலிபெருக்கிகள் மூலம் விளக்கிக் கூறப்படுகிறது இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஆகியோரை ஒவ்வொருவராக அழைத்து பேச முடியாத சூழ்நிலை நிலவுவதால் அதை தவிர்க்கும் வகையில் ஒலிபெருக்கி வைத்து தெளிவாக அறிவிக்க தொடங்கிவிட்டனர்.

இது போன்ற ஏற்பாடுகளுக்கு தனது சொந்த பணத்தி்லிருந்து கணக்குப் பார்க்காமல் செலவு செய்து வருகிறார். இந்த காவல் உதவி ஆய்வாளர் பொதுமக்களிடமிருந்து வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல பலபேர் பறிப்பது போல இவர் பணம் என்ற பேச்சையே பயன்படுத்துவது இல்லை என்றால் இவரது நேர்மையை என்னவென்று சொல்வது திரைப்படங்களில் காவல்துறை அதிகாரிகளை நேர்மையானவர் நியாயமானவர் யாரிடமும் பணம் வாங்க மாட்டார் என்று சித்தரிக்கின்றனர்.

அதேபோன்று இவர் நிஜத்தில் செயல்படுகிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது இவரது பணியை இதுநாள் வரை யாரும் உன்னிப்பாக கவனித்து அவருக்கு ஒரு பாராட்டு கூடிய வாய்திறந்து சொன்னதில்லை என்பதை அறிந்து மிகவும் மன வேதனையாக உள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் என்பதை சற்று உற்று நோக்கினால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு விடலாம் அந்தப் பணியை இவர்கள் செய்யாமல் இருப்பதால் பத்தோடு இதுவும் ஒன்று என்ற நிலையில் சர்ச் வெங்கடேசன் போன்ற நேர்மை மிகு காவல்துறையில் உள்ள பல நிலைகளில் பணியாற்றும் போலீசார் யார் கண்களுக்கும் படாமல் ஒரு ஓரமாக இருப்பதை பார்த்திட முடியவில்லையே என ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள். காவல்துறை அதிகாரிகளாவது இவரது வியத்தகு பணிகளை பாராட்டி கௌரவிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )