மாவட்ட செய்திகள்
திருச்சி டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட ஊழியர் சரவணணின் சஸ்பெண்டை உடனே ரத்து செய்து பணி வழங்க வேண்டும்.

டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட ஊழியர் சரவணணின் சஸ்பெண்டை உடனே ரத்து செய்து பணி வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மையம் சார்பில் தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புச்சட்டை அணிந்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டம் குறித்த வெள்ளை அறிக்கை விட வேண்டும், கோரிக்கைகள் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களும் தமிழக அரசு உடனே அழைத்து பேச வேண்டும், கேள்வி கேட்டார் என்ற காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர் சரவணனின் சஸ்பெண்ட் ரத்து செய்து உடனே பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் முருகானந்தம், தலைவர் சரவணன். செயல் தலைவர் பழனிபாரதி, பொதுச்செயலாளர் கோதண்டம், இணை பொதுச்செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் கணேசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
