மாவட்ட செய்திகள்
உடுமலை போராட்டம் யாருக்காக:

உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சியில் தலைவராக இருந்து வருபவர் சாமிநாதன். துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தனியார் ஒருவர் பல கிலோ மீட்டருக்கு முறை கேடாக தண்ணீர் எடுத்துச் செல்வதில் பல லட்சம் கைமாறியுள்ளது. இதை தொடர்ந்து பணத்தை பங்கு போடுவதில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியது. இதைத்தொடர்ந்து துணைத் தலைவர் கவுன்சிலர்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதில் மக்கள் யாரும் பங்கேற்க வில்லை. எனவே இந்தப் போராட்டம் யாருக்காக என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
