மாவட்ட செய்திகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நீதிப் போராளி அயோத்திதாச பண்டிதர் 109 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடுமலைப்பேட்டை அருகே கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். கடத்தூர் புதூர் முகாம் துணைச்செயலாளர் பிரபு, மாயவன் ,மூர்த்தி, கருப்புசாமி, ஆனந்த் சந்தியகுமார், திலீப்,செல்வன்,திலீப்பன், மணியன் ,சிவாணந்தம் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
