மாவட்ட செய்திகள்
சாப்பிட்ட சில நிமிடங்களில் மாணவர்கள் மயக்கம்.

கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது தொடங்கியிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
கல்லூரி விடுமுறையையடுத்து சொந்த ஊர் சென்றிருந்த இவர்கள் மூவரும் விடுமுறை முடிந்து, நேற்று மீண்டும் கல்லூரிக்கு திரும்பி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால் வெளியில் உணவகத்தில் சாப்பிடலாம் என்று வெளியில் வந்தனர். நேற்று இரவு மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர்.

