மாவட்ட செய்திகள்
காட்பாடியில் கொரோனா தடுப்பூசி முகாம்!

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு பவானி நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா தலைமையில் 7-வது வட்ட செயலாளர் பி. லோகநாதன் மூன்றாவது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமில் இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.கமல்ராஜ், மற்றும் ஜி.பாபு, ஜி.எம்.சதீஷ், மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் சிவக்குமார் உடன் இருந்தனர். முகாம் ஏற்பாடுகளை காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் செய்திருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
