மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், மாணவ மாணவிகள் அவதி:-
நேற்று இரவு துவங்கி மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை முதல் பலத்த மழையாக பெய்து வருகிறது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் படவில்லை.
இதனால் மாணவ மாணவிகள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே மயிலாடுதுறை மாவட்டத்தில் கணம் முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அளிக்காதது மாணவ மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
CATEGORIES மயிலாடுதுறை