மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 200 காளைகள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் 200 காளைகள் பங்கேற்பு – ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்த பொதுமக்கள்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு மாற்றாக எருதுவிடும் விழா கிராமங்கள் தோறும் பாரம்பரியமாக நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் கிராமத்தில் 12ம் ஆண்டு எருதுவிடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டை, போன்ற இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக இரண்டு சுற்றுகளாக ஓட விடப்பட்டது குறிப்பிட்ட நொடியில் 125 மீட்டர் தூரம் கடந்து இலக்கை எட்டும் காளை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 65 ஆரயிமும் அடுத்தடுத்து பரிசாக 50 காளைகள் தேர்வு செய்து வழங்கப்பட்டது.

காலை 8 மணிக்கு துவங்கிய இந்த எருதுவிடும் விழா மாலை 3 மணி வரையில் நடைபெற்றது பரிசை வெல்ல இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
