BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சித்திரைத் தேரோட்ட விழாவினை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம்.

சித்திரைத் தேரோட்ட விழாவினை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா துவக்கம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவினை முன்னிட்டு பூச்சொரிதல் விழா இன்று துவங்கியது. இதில் கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள்
200க்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு கூடை கூடையாக பூக்களை சாத்தினர். தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது.


இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா பூச்சொரிதல் விழா ஆகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.

மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காவும், தன்னை தரிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும் தீவினைகளும் அனுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்கு
28நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
நிகழாண்டில் 13ம் தேதி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டு கட்டுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீது பூக்களை கொண்டு வந்த கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் தலையில் சுமந்தும், கையில் ஏந்தி வந்து அம்மனுக்கு சாத்தினர்.


இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு இன்று இரவு முதல் திங்கள்கிழமை மதியம் 12மணி வரை கொண்டு வரவுள்ளனர்.
பூச் சொரிதல் திருவிழாவிற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான சமயபுரம் நெ.1 டோல்கேட்டிலிருந்து திருச்சி சென்னை மற்றும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மற்றும் கோயிலைச்சுற்றியும் தற்காலிக குடிநீர் வசதிகள், நவீன நடமாடும் கழிவறை வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை
ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்துள்ளதாக பேரூராட்சி தலைவர் சரவணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )