மாவட்ட செய்திகள்
தீவிர வாக்கு சேகரிப்பில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் 17ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.செல்வகுமாரிஇரமேஷ்பாபு அவர்களை ஆதரித்து இன்று காலை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிகண்ணன் அவர்கள் தலைமையில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.
அப்போது திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் , முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணா கல்வி குழுமங்களின் தலைவர் அருணா தொல்காப்பியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், திருநாவலூர் ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷினி அய்யனார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செம்மணங்கூர்குணசேகரன், தங்க விசுவநாதன், சிறுபான்மை பிரிவு ஜெய்னுலாப்தீன், சிபிஎம் முன்னாள் நகர செயலாளர் தங்கராசு, முன்னாள் கவுன்சிலர்கள் பாபு , ராமலிங்கம் மற்றும் கிழக்கு கந்தசாமி புரம் பகுதி திமுக நிர்வாகிகள் மொட்டையன் , இரமேஷ் பாபு , பன்னீர்செல்வம் ராஜீ, கோபிநாத், ரமேஷ் பாலாஜி, காமராஜ் , சுப்பிரமணியன், குமார், அன்புமணி, வெற்றி, புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்