மாவட்ட செய்திகள்
தேனி திமுகவில் 3 நகர செயலாளர்கள் நீக்கம் ஏன்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது தொடர்ந்து திமுக நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தேனி நகர்ப் பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர்ப் பொறுப்பாளர் முரளி, போடி நகர்ப் பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் அந்தப் பதவியை இழந்திருப்பதுடன், கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
CATEGORIES தேனி
