மாவட்ட செய்திகள்
மாநில அளவிலான செஸ் போட்டிகள் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.

மாநில அளவிலான செஸ் போட்டிகள் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சி சுந்தர் நகரில் மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டிகள் டான் செஸ் அகடமி மற்றும் எஸ் பி ஆர் ப்ரமோட்டர்ஸ் சார்பில் டான்செட் அகடமியின் செயலர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளை சிவகங்கை மாவட்ட செஸ் அகடமி நிர்வாகிகள் கண்ணன் துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், சிவகாசி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட 13க்கு மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 221 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 7, 9, 13 15 ஆகிய வயதுடைய வீராங்கனைகளும் மற்றும் ஓபன் கேட்டகிரி போட்டிகள் நடைபெற்றது.


இப்போட்டிகள் Swiss முறையின் கீழ் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டிகளும் ஐந்து சுற்று நடைபெற்றது. ஓபன் கேட்டகிரியில் வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு
முதல் பரிசாக ரூபாய் 2000, இரண்டாவது பரிசாக ரூபாய் 1500, மூன்றாவது பரிசாக ரூபாய் ஆயிரமும் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல 7வயது முதல் 15 வயது வரை வெற்றி பெற்ற மற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
