மாவட்ட செய்திகள்
தேனியில் அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணி மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில்
கழக வளர்ச்சி பணி மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றியதை தொடர்ந்து புது உற்சாகம் பெற்ற அமமுக தொண்டர்கள் நிர்வாகிகள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தேனி நகர செயலாளர் காசிமாயன் வரவேற்புரை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட , ஒன்றிய, பேரூர் நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தேனி
